மே 16 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!
கர்நாடகத்தின் ஒரு சில பகுதிகளில் வெயில் கொளுத்துவதாக தகவல்கள் வந்துள்ளன. அதற்காக பள்ளிகள் திறக்கப்படுவதை ஒத்திவைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. ஏற்கனவே திட்டமிட்டபடி மே 16-ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். 2022-23-ஆம் கல்வியாண்டை தொடங்குவதை ஒத்திவைக்கும் படி எவ்விதக் கோரிக்கையும் அரசுக்கு வரவில்லை என்று கல்வித்துறை அமைச்சர் பி.சி நாகேஷ் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
கடந்த 2 ஆண்டுகளாக நாடு முழுவதும், கொரோனா பெருந்தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் மாணவர்களின் கற்றல் முறை பாதிப்புக்கு உள்ளாகியது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள், தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தட்சிண கன்னடா மாவட்டம் பண்டுவால் தாலுகா தட்டலக்காடு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் புதிய கட்டிடம் மற்றும் வகுப்பறைகளை மாநில பள்ளிக் கல்வித்துறை மந்திரி பி.சி நாகேஷ் மற்றும் மத்திய மந்திரி ஷோபா கரந்தலாஜே ஆகியோர் திறந்து வைத்தனர். அப்போது பேசிய மத்திய மந்திரி ஷோபா கரந்தலாஜே, கர்நாடகத்தில் உள்ள குழந்தைகள் அனைத்து மொழிகளையும் கற்றுக் கொள்வது, தற்போதைய காலகட்டடத்திற்கு மிக அவசியம் ஆகும்.
TN Job “FB Group” Join Now
மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்காக அரசு கோடி கணக்கில் பணம் ஒதுக்கீடு செய்து வருகிறது, இருப்பினும் பெற்றோர் தரமான கல்வி வழங்கப்படவில்லை என்று கூறுகின்றனர். இந்த மாதிரியான குறை பேச்சுக்கள் வராமல் இருக்க ஆசிரியர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று அவர் கூறினார். அவரைத் தொடர்ந்து பேசிய பள்ளிக் கல்வித்துறை மந்திரி பி.சி நாகேஷ், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக மாணவர்களின் கற்றல் நடைமுறை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை சரி செய்யும் நோக்கத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை குறைத்து, மே 16-ஆம் தேதி முதலே பள்ளிகளைத் திறக்க அரசு முடிவு செய்தது. இதில் எவ்வித மாற்றமும் இல்லை என்றார். மேலும் மாணவர்களிடையே எண் கணித அறிவை மேம்படுத்துவதும், பாடத்திட்டத்தை குறைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? புதிய வைரஸ் பாதிப்பு எதிரொலி!
வரும் மே 16ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்படும். மாணவர்களுக்கு ஆங்கிலப் புலமை என்பது அவசியமான ஒன்றாகும், இந்த ஆண்டில் இருந்து அதை மேம்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படும். இதற்கான பயிற்சி வழங்க 27 ஆயிரம் ஆசிரியரை தேர்வு செய்து உள்ளதாக தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கான SSLC தேர்வு, நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்வு முடிவுகள் மே 3வது வாரம் வெளியாகும். மாநிலத்தில் ஏற்பட்டுள்ள இன்றைய கல்வியின் மறுமலர்ச்சிக்கு மத்திய அரசு பாராட்டுகளை தெரிவித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்