தமிழகத்தில் மீண்டும் பேருந்து சேவைகள் துவக்கம்? அமைச்சர் விளக்கம்!
கொரோனா பரவல் எதிரொலியாக தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்து சேவைகளை மீண்டுமாக துவங்குவது குறித்து விரைவில் முதல்வர் அறிவிப்பார் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல் அளித்துள்ளார்.
பேருந்து சேவைகள்:
தமிழகத்தில் கடந்த மே மாதம் 10 ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு காரணமாக பேருந்து போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. தவிர அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் இ-பதிவு கட்டுப்பாடுகளுடன் பயணம் செய்பவர்களுக்கு மட்டும் ரயில் மற்றும் விமான சேவைகள் குறைந்த அளவு மட்டுமே இயங்கி வந்தது. இந்த நிலையில் மாநிலம் முழுவதும் தற்போது கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்து வருகிறது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் – முதல்வர் உத்தரவு!
அதனால் கடந்த 2 வாரங்களாக முழு ஊரடங்கில் இருந்து சில தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் படி தேநீர் கடைகள், டாஸ்மாக் கடைகள், சலூன் கடைகள் ஆகியவை தற்போது செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் 27 மாவட்டங்களில் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ள கூடுதல் தளர்வுகளுடன் பேருந்துகள் மீண்டுமாக இயக்கப்படும் என பொது மக்களிடையே எதிர்பார்ப்புகள் நீடித்தது. ஆனால் பேருந்து சேவைகளுக்கான தடை ஜூன் 21 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
தற்போது கடைகள் அனைத்தும் திறந்திருப்பதால், பேருந்து சேவைகள் இன்றி பொது மக்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் பொது போக்குவரத்து மீண்டும் துவங்குவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். முன்னதாக ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள குடிநீர் திட்டத்தை துவங்கி வைத்த அமைச்சர், 172 கிலோமீட்டர் தூரத்திற்கு ராட்சத குழாய் பதிக்கப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடுகள் மேலும் நீடிக்காது என தெரிவித்துள்ளார்.