கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் – முதல்வர் உத்தரவு!
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா அவர்கள் அறிவித்துள்ளார்.
கொரோனா நிவாரணம்:
நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் பரவிய கொரோனா முதல் அலையில் ஏற்பட்ட உயிரிழப்பு விகிதத்தை ஒப்பிடுகையில் கொரோனா இரண்டாம் அலையில் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். தற்போது அவர்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நிவாரண உதவிகள் அளிக்கப்படுகிறது.
இன்று முதல் பேருந்து போக்குவரத்து சேவை தொடக்கம் – கூடுதல் தளர்வுகள் அமல்!
தற்போது இது குறித்து கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா அவர்கள் கூறியதாவது, கொரோனா நோய்த்தொற்றால் பலர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களை சேர்ந்தவர்கள் கொரோனாவால் உயிரிழந்திருந்தால் அந்த குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று அறிவித்தார். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 30 ஆயிரம் குடும்பங்கள் இந்த நிவாரண உதவியால் பயனடைவார்கள் என்றும் தெரிவித்தார்.
TN Job “FB Group” Join Now
இந்த அறிவிப்பினால் மாநில அரசுக்கு ரூ.250 கோடி முதல் ரூ.300 கோடி வரை செலவாகும் என்றும் இத்தகைய அறிவிப்பை நாட்டில் முதல் முறையாக கர்நாடக மாநில அரசு மட்டுமே அறிவித்துள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் கொரோனா காரணமாக வாழ்வாதாரம் இழந்து நிற்கும் 384 சுற்றுலா வழிகாட்டிகளுக்கு ரூ.5000 வழங்கப்பட்டுள்ளது என்றும் ஹோட்டல்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ரூ.3000 நிவாரண நிதியாக வழங்கப்படும் என்றும் மாநில முதல்வர் எடியூரப்பா அவர்கள் தெரிவித்துள்ளார். தற்போது இந்த அறிவிப்பு மாநில மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.