இன்று முதல் பேருந்து போக்குவரத்து சேவை தொடக்கம் – கூடுதல் தளர்வுகள் அமல்!
புதுவையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த தளர்வுகளில் பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
புதுவை தளர்வுகள்:
புதுவையில் கொரோனா நோய்பரவல் அச்சம் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி முதல் தளர்வுகள் கூடிய பொதுமுடக்கம் அமலில் இருந்து வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக கொரோனா நோய்த்தொற்று தினசரி விகிதம் அங்கு குறைந்து வருவதால், கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகிற 21 ஆம் தேதி வரை நீட்டித்து புதுவை அரசு உத்தரவிட்டது.
தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு? அமைச்சர் விளக்கம்!
புதிய தளர்வுகள் அனைத்தும் இன்று (ஜூன் 15) முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி அத்தியாவசிய கடைகள் உட்பட அனைத்து கடைகளும் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்து பொதுப் போக்குவரத்து, ஆட்டோ, டாக்சி உள்ளிட்டவை இயங்க காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் புதுவையில் பூங்கா, திரையரங்கம், விளையாட்டு மைதானம் செயல்பட தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அரசு அலுவலகங்கள் 100 சதவிகித பணியாளர்களுடன் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதியும், உணவகங்களில் 50 சதவிகித இருக்கைகளுடன் செயல்பட அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. மதுக்கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும், வழிபாட்டு தலங்கள் மாலை 5 மணி வரையும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.