தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஜூன் 15 ஆம் தேதிக்கு மேல் மின் கட்டணம் செலுத்துவதற்கு மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தற்போது தெரிவித்துள்ளார்.
மின் கட்டணம்:
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் மே 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த பொது முடக்க காலத்தில் மக்கள் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும் ஊரடங்கினால் பல குடும்பங்களில் அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாத அளவுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறப்பு எப்போது? கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!
இதன் காரணமாக தமிழகத்தில் மே 10 முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த வேண்டியவர்கள், ஜூன் 15 ஆம் தேதி வரை செலுத்திக்கொள்ளாம் என மின் கட்டணம் செலுத்தும் கால அவகாசத்தை தமிழக அரசு நீட்டித்தது. இந்த நிலையில் மாநிலம் முழுவதும் தற்போது கொரோனா பாதிப்பு வீதம் படிப்படியாக குறைந்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
இதை கருத்தில் கொண்டு இனி மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 15 க்கு மேல் நீட்டிக்கப்படாது என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ‘தமிழகத்தில் நோய் தோற்று வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் பொது மக்கள் மின் கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படாது’ தெரிவித்துள்ளார்.