தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறப்பு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் வேகமாக பரவி வரும் நிலையில் பள்ளிகளுக்கு தற்போது விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பது எப்போது? என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
கொரோனா முதல் இரண்டு அலைகளில் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில் சில மாதங்களாக உருமாறிய கொரோனா வைரஸான ஓமிக்ரான் பரவல் காரணமாக பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே இருந்த வைரஸ் தாக்கத்தை போல இல்லாமல் இந்த வைரஸ் அதிகம் பரவும் தன்மையுடையதாக இருப்பதால் குறைந்த காலத்தில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மாணவர்கள் ஆன்லைன் மூலமாக பாடங்களை படித்து வருகின்றனர். மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இதை விடுமுறை என நினைக்காமல் படிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அவர் விளக்கம் அளித்து இருக்கிறார். அதில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் பள்ளிகள் திறப்பதற்கு முதல்வரிடம் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாளில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படாது என்றும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இருமொழிக் கொள்கை என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று தமிழக ஆளுநர் தனது குடியரசு தின வாழ்த்துச் செய்தியில் இரண்டு மொழிகளைத் தாண்டி மூன்றாவதாக ஒரு மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்த நிலையில் அதற்கான விளக்கத்தை அவர் அளித்துள்ளார்.