தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி பெற மீண்டும் வாய்ப்பு – அமைச்சர் அறிவிப்பு!

0
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி பெற மீண்டும் வாய்ப்பு - அமைச்சர் அறிவிப்பு!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி பெற மீண்டும் வாய்ப்பு - அமைச்சர் அறிவிப்பு!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி பெற மீண்டும் வாய்ப்பு – அமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தில் அரசு கூட்டுறவு சங்கங்களில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் தங்க நகைக்கடன்களை குறிப்பிட்ட வரம்புகளின் கீழ் தள்ளுபடி செய்ய அறிவிப்பு வெளியிட்டிருக்கும் நிலையில், இதற்காக மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.

நகைக்கடன் தள்ளுபடி:

தமிழகத்தில் திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் தங்க நகைகளை வைத்திருக்கும் நபர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தது. ஆட்சிக்கு வந்த பின்னர் பல வாக்குறுதிகளையும் படிப்படியாக நிறைவேற்றி வரும் திமுக அரசு, நகைக்கடன் விஷயத்தில் அதிக மோசடிகள் நடந்திருப்பதை கண்டறிந்து தள்ளுபடி பெறுவதற்கான நிபந்தனைகளை அறிவித்தது. அரசின் நிபந்தனைகளின் கீழ் வரும் கடன்கள் அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. மோசடி விவரங்கள் அனைத்தும் தனியாக சேகரிக்கப்பட்டு அவை நிராகரிக்கப்பட்டது.

விஜய் டிவி ‘நம்ம வீட்டு மாப்பிள்ளை’ சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ரோஷினி? ரசிகர்கள் ஷாக்!

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்கள் தேனி மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். அங்கு செய்தியார்களை சந்தித்து, தமிழக முதல்வர் தான் கொடுத்த வாக்கினை முறையாக காப்பாற்றி உள்ளார். கடந்த ஆட்சி காலத்தில் தமிழகத்தில் 6,000 கோடி கடன் இருந்த போதிலும், கடுமையான நோய் தொற்று மற்றும் பெரு வெள்ள பாதிப்பு போன்ற பலவற்றையும் கடந்து மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களை முறையாக செய்து வருகிறார். நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு சங்கத்தின் தலைவர் அல்லது செயலாளர் இதற்காக லஞ்சம் கேட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

TNPSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021-22 | விண்ணப்பங்கள் வரவேற்பு!

நகைக்கடன் ரூ.6,000 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கம் மூலம் பெறப்பட்ட மகளிர் சுய உதவிக் குழு கடன் ரூ.2,761 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் பயிர்க்கடன் ரூ.12,500 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி தொடர்பான கோரிக்கைகள் வருகிறது. நகைக்கடன் தள்ளுபடி திட்டத்திற்கு ரேஷன் கார்டு, ஆதார் கார்டு விவரங்களை சரியாக தராதவர், மீண்டும் சரியான விவரங்களை அளித்து அவை சரிபார்க்கப்பட்டு ஆய்வின் அடிப்படையில் அவர்களுக்கு தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வைத்திருக்கும் 10,18,066 பேருக்கு கடன் தள்ளுபடி உண்டு என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!