தமிழக அரசு பணியில் சேர திட்டமிடுபவரா நீங்கள்? அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

0
தமிழக அரசு பணியில் சேர திட்டமிடுபவரா நீங்கள்? அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழக அரசு பணியில் சேர திட்டமிடுபவரா நீங்கள்? அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழக அரசு பணியில் சேர திட்டமிடுபவரா நீங்கள்? அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் அரசுப் பணி வாங்கித்தருவதாக கூறும் ஒருவரையும் நம்பி பணத்தை இழக்க வேண்டாம் எனவும், அரசின் கட்டணங்களை மீறி அதிகமாக வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது புகார் அளிக்க அச்சப்பட வேண்டாம் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தியுள்ளார்.

அமைச்சர் அறிவுறுத்தல்

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் 9 லிருந்து 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்காக நேரடி வகுப்புகள் மீண்டுமாக துவங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து வரும் நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் 1 லிருந்து 8ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கான நேரடி வகுப்புகளும் மீண்டும் துவங்க உள்ளது. இந்நிலையில் பள்ளிகளை திறப்பதற்கு தேவையான கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (செப்.30 ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கு வேலைவாய்ப்பு இணையதளம் – மத்திய அரசு ஏற்பாடு!

இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘தமிழகத்தில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட இருக்கும் நிலையில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் பள்ளிகள் முழுவதும் எப்போதும் தூய்மையாக காணப்பட வேண்டும் என அறிவுறுத்தபட்டுள்ளது. இதனுடன் தற்போது நடந்து கொண்டிருக்கும் வகுப்புகளில் பின்பற்றப்படுகிற முக்கிய வழிமுறைகள் நவம்பர் 1 முதல் துவங்கும் வகுப்புகளிலும் தொடரும். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துறை ரீதியாக மேற்கொள்ளும் அனைத்து பணிகளும் கண்காணிக்கப்படும்.

அக்.1 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

மேலும் யாரிடமும் அரசு வேலைக்காக பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். விழிப்புடன் இருங்கள். மோசடியினால் பாதிக்கப்பட்டது தெரிந்தால் உடனே காவல்துறையை அணுகவும். அதே நேரத்தில் அரசு விதித்ததை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது புகார் அளிக்க பெற்றோர்கள் முன்வர வேண்டும். 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் குறைபாடுகளை நீக்கும் வகையில் சிறப்பு பயிற்சி வழங்கப்படும். மாணவர்களின் வருகையை பொறுத்து காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும்’ என தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!