அக்.1 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
திருப்பூர் மாவட்டத்தில் அக்டோபர் 1 ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. வேலை தேடுவோர் இந்த வேலைவாய்ப்பு முகாம் மூலம் பயன்பெறலாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு :
தமிழகத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. கொரோனாவால் விதிக்கப்பட்ட ஊரடங்கால் ஏராளமான மக்கள் தங்களின் அன்றாட வேலைகளை இழந்து மாத வருமானமின்றி சிரமப்பட்டு வருகின்றனர். மீண்டும் பணிக்கு சேருவது என்பது பெரும் சவாலான காரியமாக இருந்து வருகிறது. தற்போது தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை அரசின் முயற்சியாலும், மக்களின் போதிய ஒத்துழைப்பாலும் குறைந்து வருவதால் மீண்டும் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் நாளை (அக்.1) மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அதனை படி அக்டோபர் 1ம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. அம்மாவட்டத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். ஆனால் கடந்த மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா இரண்டாம் அலை காரணமாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவில்லை. தற்போது கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்ட்டுள்ளதால் மீண்டும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி – ஆதிதிராவிடர் நலத்துறை உத்தரவு!
அதன்படி திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 11 மணிக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. வேலை தேடும் நபர்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன் பெறலாம். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 0421- 2999152 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் தனியார் துறையில் வேலைக்கு சேருவதால் தங்களின் அரசு வேலைவாய்ப்பு பதிவு எண் ரத்து செய்யப்படாது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.