தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் – அமைச்சர் விளக்கம்!
செப்டம்பர் 10 ஆம் தேதியன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு மத்திய அரசு விதித்துள்ள கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை, தமிழகத்திலும் செயல்படுத்தி இருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல் அளித்துள்ளார்.
விழாவிற்கு தடை:
இந்தியா முழுவதும் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் செப்டம்பர் 10 ஆம் தேதியன்று விநாயகர் சதுர்த்தி விழா கடைப்பிடிக்கப்பட உள்ளது. இதற்கிடையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுதல், நீர்நிலைகளில் சிலைகளை கரைத்தல் போன்ற செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக கோவில்களில் மொட்டை அடிக்க இனி கட்டணம் இல்லை – அமைச்சர் அறிவிப்பு!
தவிர சிலாகை ஊர்வலமாக எடுத்து செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டு, வீதிகளில் வைத்து விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அனைவரும் அவரவர் வசிக்கும் இடங்களுக்கு அருகில் இருக்கும் நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்கவும், கோயில்களின் சுற்றுப்புறம் மற்றும் வெளிப்புறங்களிலும் விநாயகர் சிலைகளை வைத்து விட்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செப். 5-ஆம் நாள் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம் – முதல்வர் வாழ்த்து!
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று (செப்டம்பர் 4) நடைபெற்றது. அப்போது விநாயகர் சதுர்த்தி கட்டுப்பாடுகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, ‘இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை தடுப்பு நடவடிக்கைகளாக மக்கள் கூடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில் தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடுகளை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.