தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச கூலித்தொகை 300 ஆக உயர்வு – அரசு அனுமதி!
ஜம்மூ காஷ்மீரில் தினக் கூலி தொழிலாளர்கள் மற்றும் சாதாரண தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச கூலித் தொகையை உயர்த்துவதற்கு அரசு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் தொழிலார்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தினக் கூலி:
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டில் இருந்து கொரோனா என்னும் கொடிய வகை வைரஸ் தொற்று பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தொற்றை கட்டுப்படுத்த அரசு விதித்த ஊரடங்கு மற்றும் கட்டுப்படுகளால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த சூழலில் தொழில்களும் முடங்கியதால் பொருளாதார நெருக்கடி நிலை நிலவியது. இதனை சமாளிக்க மத்திய மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கையில் எடுத்தது. இது சாமானிய மக்கள் முதல் செல்வதந்தர்கள் வரை அனைவரையும் பாதித்தது.
SBI வங்கியில் கணக்கு வைத்து இருப்பவர்கள் கவனத்திற்கு – முழு விவரம் இதோ!
இத்தகைய சில நிலையில் வேலையும் அதன் மூலம் வரக் கூடிய வருமானமும் இல்லாமல் பொது மக்கள் அவதிக்குள்ளாகினர். கொரோனா பரவல் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திருப்பும் நிலையில் விலைவாசி உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஜம்மூ காஷ்மீர் அரசு தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச கூலித் தொகையை உயர்த்த அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து அரசு துறைகளில் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்களுக்கான தினக் கூலி 225 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
தொழிலாளர்களுக்கான கூலித் தொகையை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை இன்னும் உயர்த்தவில்லை. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை கூலித் தொழிலாளர்களுக்கு தினக் கூலியை உயர்த்தி அறிவிப்பு வெளியிடுவதற்கு இன்னும் குறைந்தது மூன்று மாதங்களாவது ஆகும் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார். இந்த இடைக்காலத்தில் நிவாரணம் வழங்குவதற்காக கூலித் தொகையை தற்காலிகமாக உயர்த்தபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.