தமிழத்தில் இனி பால், பால் பொருட்கள் கண்ணாடி பாட்டிலில் விற்பனை – அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் பால் மற்றும் பால் பொருட்களை சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும் பிளாஸ்டிக் பைகளில் விற்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சமூக நல வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
பால் விற்பனை:
தமிழகத்தில் பால், தயிர், மோர் போன்ற பொருட்கள் அனைத்தும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சமூக ஆர்வலர் ஐயா என்பவர் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இது தொடர்பாக வழக்கு ஒன்று பதிவு செய்துள்ளார். அவர் அளித்துள்ள மனுவில் தமிழகத்தில் பால், பால் பொருட்களை கண்ணாடி பாட்டில்கள் அல்லது டெட்ரா பாக்கெட்டுகளில் விற்பனை செய்ய வேண்டும் என்றும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் மூலம் பால் விற்பதற்கு அரசு தடை விதிக்க வேண்டும் என்று சமூக நல வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு ஆதார் எடுத்தாச்சா? – எப்படி ஆதார் எடுக்கணும்? தகவல்கள் இதோ!
அரசு இந்த மனுவின் கோரிக்கையை ஏற்று பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் பால் விற்பனைக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு கண்ணாடி பாட்டில்கள் அல்லது டெட்ரா பாக்கெட்டுகள் மூலம் பால், பால் பொருட்கள் விற்கப்பட்டால் விலை உயர்வை தவிர்க்க முடியாதது ஆகிவிடும் என்று பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.