சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கான ஹாப்பி நியூஸ் – கூடுதல் சிற்றுந்துகளை இயக்க ஏற்பாடு!
மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதால் பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ வழித்தடங்களுக்கு கூடுதல் சிற்றுந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளது.
மெட்ரோ ரயில் பயணி:
நாளுக்கு நாள் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக எந்த போக்குவரத்து வசதியும் இல்லாமல் இருந்தது. இந்த கொரோனா காலகட்டத்திற்கு பிறகு தான் மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியது. சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டுமே நாள் ஒன்றுக்கு 81,000 பயணிகள் வரை பயணம் செய்தனர். பிப்ரவரி மாதத்தில் பயணிகளின் எண்ணிக்கை 1.13 லட்சமானது.
IRCTC மூலம் ரயில் டிக்கெட் புக்கிங் செய்வோர் கவனத்திற்கு – காத்திருப்பு நிலையை சரிபார்ப்பது எப்படி?
இதனையடுத்து பிப்ரவரி மாதத்தில் 1.13 லட்ச பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 1.51 லட்ச பயணிகளும், மே மாதத்தில் 1.59 லட்ச பயணிகளும் மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளனர். மற்ற நாட்களை விட வார இறுதி நாட்களில் அதிகமான பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் கோடை விடுமுறையின் காரணமாக அதிகமானோர் வெளியூர் சென்று வருவதால் சென்னை மெட்ரோ ரயிலில் 1.3 லட்ச பயணிகள் வரைக்கும் பயணம் செய்து வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
மேலும், மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரே ரயில் நிறுவனம் 6 வழித்தடங்களில் 12 சிற்றுந்துகளை இயக்கி வருகிறது. இதுமட்டுமல்லாமல் கூடுதலாக 5 வழித்தடங்களில் 10 சிற்றுந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதாவது, அரசினர் தோட்டம் மெட்ரோ முதல் தலைமை செயலகம் வரைக்கும், கிண்டி மெட்ரோ முதல் வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையம் வரைக்கும், சின்னமலை மெட்ரோ முதல் தரமணி வரைக்கும், செனாய் நகர் மெட்ரோ முதல் தி.நகர் பேருந்து நிலையம் வரைக்கும், விமானம் நிலையம் மெட்ரோ முதல் தாம்பரம் மேற்கு ஆகிய 5 வழித்தடங்களில் கூடுதலாக 2 சிற்றுந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மற்ற மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து கூடுதலாக சிற்றுந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.