அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மூலம் புதிய கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
இப்போது பயனர்கள் தங்களது வீடுகளில் இருந்தபடியே புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்க எளிய வழிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் இதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும் என்பது பற்றி இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.
புதிய ரேஷன் கார்டு
மத்திய அரசின் பொது விநியோகத்துறையின் மூலம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள பயனர்களுக்கு மானிய விலையில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரேஷன் கார்டு திட்டத்தின் மூலம் உணவு தானியங்களான அரிசி, கோதுமை, எண்ணெய், சர்க்கரை போன்றவற்றை பயனர்கள் குறைந்த அல்லது மானிய விலையில் பெறலாம். இதற்கான பலன்களைப் பெறுவதற்கு உங்கள் பெயர் ரேஷன் கார்டில் இருக்க வேண்டியது அவசியமாகும்.
நாட்டில் மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு அமல் – அரசு அதிரடி அறிவிப்பு!
இது தவிர பயனர்கள் புதிய ரேஷன் அட்டைகளுக்காக விண்ணப்பிக்க முன்பெல்லாம் அரசு அலுவலகங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இப்போது ரேஷன் கார்டைப் பெறும் செயல்முறைகள் ஆன்லைன் மூலம் எளிதாக்கப்பட்டிருக்கிறது. அதனால் எவ்விதமான நேர செலவுகளும் இல்லாமல் பயனர்கள் வீட்டிலேயே அமர்ந்து ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கு குறிப்பிட்ட சில ஆவணங்கள் தேவைப்படும் என்பதை பயனர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். இப்போது புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் முறை குறித்த தகவல்களை பார்க்கலாம்.
தேவையான ஆவணங்கள்:
- குடும்ப உறுப்பினர்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
- ஆதார் அட்டை
- மின் ரசீது
- வருமான சான்றிதழ்
- பாஸ்புக்கின் முதல் பக்கத்தின் நகல்
- எரிவாயு இணைப்பு விவரங்கள்
- ரேஷன் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க:
- முதலில் அந்தந்த மாநிலங்களுக்கான போர்ட்டலில் உள்நுழையவும்.
- அதன் பிறகு NFSA 2013ன் கீழ் உணவுப் பாதுகாப்புக்கான விண்ணப்பப் படிவத்தை கிளிக் செய்யவும்.
- விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களைப் பூர்த்தி செய்து அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றவும்.
- இந்த படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பின்னர் அதை பிராந்திய CSC மையத்தில் சமர்ப்பிக்கவும்.
- இந்த வழிமுறைகள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடும் என்பது கவனிக்கத்தக்கது.