சென்னையில் இன்று (பிப். 1) மெமு விரைவு ரயில் சேவை ரத்து – ரயில்வே கோட்டம் தகவல்!
சென்னையில் எழும்பூர் – விழுப்புரம் மார்க்கத்தில் ஒலக்கூர் யார்டில் பொறியியல் பணி நடைபெற இருக்கிறது. அதனால் மேல்மருவத்தூர் – விழுப்புரம் இடையே மெமு விரைவு ரயில் சேவை இன்று (பிப்.1) ரத்து செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் ரத்து:
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் பலர் ரயில் சேவையை நம்பி தினசரி பயணம் செய்கின்றனர். மக்களின் வசதிக்காக அடுத்தடுத்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விடுமுறை நாட்களில் பயணிகளின் தேவைக்கு தகுந்தாற் போல ரயில்கள் இயக்கப்படும். அந்த வகையில், இன்று (பிப். 1) எழும்பூர் – விழுப்புரம் மார்க்கத்தில் ஒலக்கூர் யார்டில் பொறியியல் பணி நடைபெற இருக்கிறது. அதனால் மேல்மருவத்தூர் – விழுப்புரம் இடையே மெமு விரைவு ரயில் சேவை ரத்து செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று (பிப் 1) 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
மேலும் மேல்மருவத்தூர் – விழுப்புரத்துக்கு இன்று (பிப்.1) முற்பகல் 11.30 மணிக்கு இயக்கப்படும் மெமு விரைவு ரயில் மற்றும் விழுப்புரம் – மேல்மருவத்தூர் இடையே இன்று மதியம் 1.40 மணிக்கு இயக்கப்படும் மெமு விரைவு ரயில் ஆகிய இரு ரயில்கள் ரத்து செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகள் அதற்கு தகுந்தாற் போல திட்டமிட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.