சூப்பர் மாடல் மீரா மிதுன் ஜாமீன் மனு மீதான விசாரணை – ஆகஸ்ட் 23 க்கு ஒத்திவைப்பு!
விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக மக்களிடம் பிரபலமானவர் சூப்பர் மாடல் மீரா மிதுன். அவர் பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் மற்றும் அவரது நண்பர் ஜாமீன் கோரிய வழக்கு விசாரணை ஆகஸ்ட் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மீரா மிதுன்:
தமிழகத்தை சேர்ந்த மீரா மிதுன் நிஜ பெயர் தமிழ் செல்வி. தமிழ் பெண்ணாக டஸ்கி நிறத்தில் இருந்து மாடலிங் துறையில் நுழைந்துள்ளார். அவர் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக மக்களிடம் பிரபலமடைந்தார். நடிகை மீரா மீதுன் அந்த நிகழ்ச்சி மட்டுமல்லாமல் தமிழ் படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின்னரும் பல முன்னணி நடிகர்கள் பற்றி விமர்சனங்களை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். நடிகர் கமல் குறித்து கூட சர்ச்சைகளை கிளப்பி உள்ளார்.
382வது மெட்ராஸ் தின போட்டிகள் குறித்த அறிவிப்பு – சென்னை மாநகராட்சி வெளியீடு!
தன்னைத் தானே சூப்பர் மாடல் என அழைத்துக் கொள்ளும் அவர் ஒரு வீடியோவில் இயக்குனர் ஒருவர் தனது முகத்தை பயன்படுத்துவதாக அவரை பட்டியலின மக்கள் சாதி பெயர் சொல்லி திட்டியுள்ளார். அதனால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு அளித்த புகாரை அடுத்து நடிகை மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி கேரளாவில் அவரது நண்பரின் ஹோட்டல் ஒன்றில் தலைமறைவாக இருந்த மீரா மிதுனை குற்றப்பிரிவு போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் அவரது ஆண் நண்பரும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் மற்றும் அவரது நண்பருக்கு ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு விசாரணை தற்போது ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.