கொரோனா மூன்றாவது அலை எப்போது தொடங்கும்? மருத்துவ நிபுணர்கள் கணிப்பு!

0
கொரோனா மூன்றாவது அலை எப்போது தொடங்கும்? மருத்துவ நிபுணர்கள் கணிப்பு!
கொரோனா மூன்றாவது அலை எப்போது தொடங்கும்? மருத்துவ நிபுணர்கள் கணிப்பு!
கொரோனா மூன்றாவது அலை எப்போது தொடங்கும்? மருத்துவ நிபுணர்கள் கணிப்பு!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்புகள் தற்போது குறைந்து உள்ள நிலையில், மூன்றாம் அலை குறித்து மருத்துவ வல்லுநர்கள் தங்களின் கணிப்பை தெரிவித்துள்ளனர்.

மூன்றாம் அலை:

இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்றின் முதல் அலை பாதிப்புகள் பரவ ஆரம்பித்தது. ஆரம்ப கட்டத்திலேயே பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியதால் நாடு முழுவதும் பொது ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மிகவும் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே விற்பனை செய்வதற்கு கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அனைத்து வகையான பொதுப்போக்குவரத்து, பொது இடங்களிலும் மக்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை!

தொடர்ந்து விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் விளைவினால் 2020ம் ஆண்டின் கடைசியில் கொரோனா முதல் அலை பாதிப்புகள் ஓய்ந்து கட்டுக்குள் வரத் தொடங்கியது. அதன்பிறகு, மெல்ல மக்களின் இயல்பு வாழ்கை திரும்பியது. ஆனால் திடீரென்று 2021ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியது. ஏப்ரல் மாத இறுதி மற்றும் மே மாத தொடக்கத்தில் மீண்டும் கொரோனா தொற்று உச்சத்தை தொட்டது. தொற்றின் 2ம் அலை பாதிப்புகள் இதுவரை இல்லாத அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியது. நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக மாநில வாரியாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

TN TRB முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – வயது வரம்பு இதுவரை தான்!

இதனால் சமீப காலமாக நாடு முழுவதும் பாதிப்புகள் குறைந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது. ஆனால் முன்னதாக மருத்துவ வல்லுநர்கள் கொரோனா 3ம் அலை பாதிப்புகள் அக்டோபர் மாதத்தில் உச்சம் பெரும் என்று தெரிவித்தனர். ஆனால் தற்போது, வாராந்திர தொற்று கண்டறியும் சராசரியும் மிகவும் குறைந்து வருவதாகவும், டெல்டா வகை வைரஸ்கள் தான் தற்போது பரவி வருவதாகவும் மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தற்போதைக்கு கொரோனா மூன்றாம் அலை பாதிப்புகள் ஏற்படாது என்று கூறியுள்ளனர்.

எனவே மக்கள் கவலை அடைய தேவை இல்லை என்றும், ஒரு வேளை அடுத்த ஆண்டு மத்தியில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை பாதிப்புகள் ஏற்படும் என்றும், மூன்றாம் அலை பாதிப்பின் போது 30 வயதிற்கும் குறைவாக உள்ளவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!