தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை!
தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம்:
தமிழகத்தில் கடந்த ஆட்சியில் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி 2003ம் ஆண்டிற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பணி நிறைவுக்கு பின் மாதாந்திர ஓய்வூதியம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றது. ஆனாலும் அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவில்லை.
TN TRB முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – வயது வரம்பு இதுவரை தான்!
தற்போது வரை அது நடைமுறையில் உள்ளது. அதே சமயம் அதற்கான எதிர்ப்புகளும் அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் திமுக, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
ஜீ தமிழ் ‘திருமதி ஹிட்லர்’ சீரியலின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் – ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்த நிலையில் நேற்று (19.10.2021) விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் 2வது மாநில தேர்தல் மற்றும் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கட்டாய இடமாறுதல் திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை கைவிட்டு, வெளிப்படையான பொது மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும். மேலும் 2004 முதல் 2006 வரையிலான தொகுப்பூதிய பணிக்காலத்தை கருத்தில் கொண்டு பதவி உயர்வு அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
வாங்குறதே தண்டம் இதுல பென்ஷன் வேற…