தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அரசாணை – நாட்டுப்புற கலைகளை பாதுகாக்க நடவடிக்கை!

0
தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அரசாணை - நாட்டுப்புற கலைகளை பாதுகாக்க நடவடிக்கை!
தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அரசாணை - நாட்டுப்புற கலைகளை பாதுகாக்க நடவடிக்கை!
தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அரசாணை – நாட்டுப்புற கலைகளை பாதுகாக்க நடவடிக்கை!

தமிழகத்தில் நடைபெறும் அனைத்து அரசு விழாக்கள், தனியார் நிறுவனங்களில் நடைபெறும் விழாக்களில் நாட்டுப்புற கலைகளை பாதுகாக்கும் விதமாக தமிழக அரசு தற்போது புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.

நாட்டுப்புற கலைகள்:

தமிழகத்தில் கொரோனா காரணமாக பல்வேறு ஊரடங்கு விதிமுறைகளை அரசு அறிவித்தது. அதில் குறிப்பாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் பொது மக்கள் கூட்டம் கூடும் அனைத்து விதமான நிகழ்ச்சிக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் அனைத்து கோவிலில் நடைபெறும் திருவிழாக்கள் கொண்டாடுவதற்கு தடை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் கோவில் திருவிழாக்களில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளும் தடை செய்யப்பட்டது.

PF அக்கவுண்ட்டில் இருக்கும் Balance தொகையை அறிந்து கொள்ளும் 4 வழிகள் – பயனர்கள் கவனத்திற்கு!

இதன் விளைவாக கலை நிகழ்ச்சிகளில் ஈடுபடும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு எந்தவொரு வேலைவாய்ப்பும் இல்லாமல் இருந்தன. இதனால் இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தங்களின் நாட்டுப்புற கலைகளை விட்டு வேறு வேலைகளுக்கு சென்றனர். இவ்வாறு நாட்டுப்புற கலைகள் அழிந்து கொண்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை ஒரு பகுதியாக நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

TNPSC குரூப் 4 VAO, குரூப் 2 தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய விவரங்கள் & மாற்றங்கள்!

தமிழகத்தில் நடைபெறும் அனைத்து அரசு விழாக்கள், தனியார் நிறுவனங்களில் நடைபெறும் விழாக்களில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை ஒரு பகுதியாக நடத்த வேண்டும் என்று அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அத்துடன் ஆலைகள், கல்வி நிறுவனங்கள் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை இடம் பெற வேண்டும். இவ்வாறு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை ஒரு பகுதியாக கொண்டு வருவதன் மூலம் நாட்டுப்புற கலைகளை பாதுகாக்க முடியும். மேலும் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வினைச் செம்மைப்படுத்தவும் முடியும் என்று அரசு இவ்வாறு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!