தமிழகத்தில் கொரோனா போல ஃப்ளூ காய்ச்சல் பரவ கூடாது – அரசு எடுக்கும் தீவிர நடவடிக்கை!
தமிழகத்தில் கடந்த மாதம் முதல் பல வகையான காய்ச்சல் தொற்றுகள் திடீரென்று ஏற்பட்டு வருகிறது. அதிலும், குறிப்பாக, இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் அதிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
H1N1 காய்ச்சல்:
தமிழகம் முழுவதும் திடீரென்று H1N1 வகையை சேர்ந்த இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது. மேலும், அதிக அளவில் குழந்தைகள் இந்த வகையான காய்ச்சலால் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 1,000ஐ கடந்துள்ளது. இதனால் , காய்ச்சல் குறித்து கவனமுடன் இருக்க மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தமிழக சுகாதாரத்துறை இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளது.
அதன்படி, இன்ஃப்ளூயன்சா வைரஸ் காய்ச்சலுக்கு, திடீர் வறட்டு இருமல், தொண்டை வலி, தலைவலி, மூக்கடைப்பு, உடல் வலி , உடல் சோர்வு ஆகியவை அறிகுறிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும், காய்ச்சல் பொதுவாக 4 நாட்களிலும் ஒரு சிலருக்கு 1 வாரம் வரையிலும் இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிலவும் பதற்றம் – ஊர்வலங்களுக்கு தடை! காவல் ஆணையரின் முக்கிய உத்தரவு!
Exams Daily Mobile App Download
இந்நிலையில், H1N1 இன்ஃப்ளூயன்சா காய்ச்சலுக்கு முன்னதாகவே தடுப்பூசிகள் உள்ளது என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் உறுதி செய்யப்படும் காய்ச்சலின் பாதிப்புகளை தடுக்கும் நடவடிக்கையாக, 11,500 மருத்துவமனைகளுக்கு தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கான டெண்டர்களை கேட்டுள்ளதாக தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் அறிவித்துள்ளது. கொரோனா வீரியம் எடுத்ததை போல தமிழகத்தில் இந்த காய்ச்சல் பரவ கூடாது என்பதில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்