விருதுநகரில் நாளை (மார்ச் 30) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மின்தடை ஏற்படுகிறது. இதனை தொடர்ந்து நாளை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லாங்கிணறு, ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் நாளை (மார்ச்.30) மாவட்டத்தின் சில பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளது.
மின்தடை அறிவிப்பு
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் மின் கசிவு மற்றும் மின் கோளாறு காரணமாக பல்வேறு விபத்துகள் ஏற்படுகிறது. அத்துடன் ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. அதனால் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்படுகிறது. மேலும் இதனை அரசு முறையாக அறிவித்து அதன்பின் செயல்படுத்துகிறது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து – வலுக்கும் போராட்டம்!
அதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிகிறது. இதனை தொடர்ந்து நாளை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லாங்கிணறு, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும். அதன்படி திருவில்லிப்புத்தூர் துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான ஸ்ரீவில்லிபுத்தூர், குட்டதட்டி, சித்தாலும் புதூர், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (மார்ச்.30) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ரத்து செய்யப்பட்ட கார்டை ஆக்டிவேட் செய்யும் முறைகள்!
மேலும் விருதுநகர் உள்ளரங்கு துணை மின் நிலையத்தால் பயன்பெறும் பகுதிகளான ரோசல்பட்டி ரோடு, பட்டேல் ரோடு, ஏ.ஏ. ரோடு, பாண்டியன் நகர், ரிங்க் ரோடு, ஐ.சி.ஏ. காலனி, ராமமூர்த்தி சாலை, அம்பேத்கர் தெரு, சத்யமூர்த்தி ரோடு, கஸ்தூரிபாய் ரோடு, கால்நடை மருத்துவமனை சாலை, எல்.பி.எஸ். நகர், எல்.ஐ.ஜி.காலனி, தந்தி மரத்தெரு, பேராசிரியர் காலனி, ஸ்டேட் பாங்க் காலனி உள்ளிட்ட பகுதிகளிலும் அத்துடன் மல்லாங்கிணறு துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான நந்திக்குண்டு, மேல துலுக்கன்குளம், மல்லாங்கிணறு நகர் பகுதி, வலையங்குளம், வில்லிபத்திரி, நாகம்பட்டி, வழுக்கலொட்டி, வரலொட்டி, கெப்பிலிங்கம்பட்டி, அழகியநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நாளை (மார்ச்.30) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் சின்னதுரை தெரிவித்துள்ளார்.