தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல்? நிர்வாகம் முக்கிய முடிவு!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், டாஸ்மாக் கடைகளில் நேரம் குறைப்பு குறித்து நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும், அரசிடம் விரைவில் அனுமதி வாங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதன் பின்னர் அரசின் கட்டுப்பாட்டு நடவடிக்கை காரணமாக கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள பொது இடங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தவறை உணர்ந்து ஜெனியை வீட்டிற்கு அழைத்து வரும் செழியன் – இன்றைய “பாக்கியலட்சுமி” சீரியல்!!
மேலும் நேற்று அறிவித்த அறிவிப்பின் படி, மேலும் 2 வாரங்களுக்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
டாஸ்மாக் கடைகளில் கூட்ட நெரிசல் காரணமாக கொரோனா பாதிப்பு அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை குறைக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தற்போது காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மதுக்கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் இனி மதியம் 12 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அரசிடம் அனுமதி கேட்டபின்னர் முடிவு செய்து பின்னர் அறிவிப்பு வெளியிடப்படும் என டாஸ்மார்க் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஒரு பக்கம் கடைகளை முழுமையாக மூட வேண்டும் என கோரிக்கை வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.