இன்று முதல் இரவு & வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு – மாநில அரசு அறிவிப்பு!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இன்று முதல் இரவு மற்றும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள்:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 1 லட்சம் பேருக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, ஹரியானா, மத்திய பிரதேசம், கேரள மாநிலங்களில் கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வருகிறது.
TN Job “FB Group” Join Now
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 50,000க்கு அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். இதுவரை 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் நோய் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 32% அல்லது 28% அகவிலைப்படி – நிபுணர்களின் கருத்து!!
இது குறித்து அவர் கூறியதாவது, “மகாராஷ்டிராவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி (இன்று) முதல் வெள்ளி வரை இரவு மற்றும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஊரடங்கின் போது மால், ஓட்டல், திரையங்கம், உடற்பயிற்சி கூடம், பூங்கா, மைதானம், மதுபான பார் போன்றவை மூடப்படும்.
தமிழகத்தில் உள்ள பள்ளிகள் ஏப்ரல் 5ம் தேதி திறப்பு – முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு!!
அதன்படி மாநிலத்தில் அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் செயல்படும். மும்பை மாகாணத்தில் ரயில்கள் வழக்கம் போல் செயல்படும். அரசு அலுவலங்களில் 50 சதவிகித ஊழியர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும். ஆலைகள் வழக்கம் போல் செயல்படும். வேலை செய்யும் நிறுவனங்களில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
தமிழகத்தில் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள் ஒத்திவைப்பு – தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு!!
ஊழியர்கள் யாருக்காவது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அதற்கான பொறுப்பை நிர்வாகமே ஏற்க வேண்டும். சனி மற்றும் ஞாயிற்று கிழமை ஊரடங்கின் போது அத்தியாவசிய தேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். மக்கள் கொரோனா குறித்த கட்டுப்பாடு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதுகுறித்த அதிகாரபூர்வ வழிமுறைகளை அரசு விரைவில் வெளியிடும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு – கட்டுப்பாடுகள் தீவிரம்!!
இந்த ஊரடங்கு அறிவிப்பு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் முதல்வர் உத்தவ் தாக்கரே தொழில்துறையினருக்கு சில முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், “கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு தொழில் நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொருளாதாரத்தை விட மனித உயிர் முக்கியமானது. அனைத்து தரப்பு மக்களும் ஒன்று சேர்ந்து கொரோனாவை ஒழிக்க ஒத்துழைக்க வேண்டும்”, இவ்வாறு தெரிவித்தார்.