தமிழகத்தில் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள் ஒத்திவைப்பு – தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு!!
ஏப்ரல் மாதம் நடக்கவிருந்த தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்த தேர்வுகளை தள்ளி வைத்துள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள்:
வழக்கமாக தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதம் நடைபெறுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகளை நடத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டது.
இந்நிலையில் 2021ஆம் ஆண்டிற்கான தொழில்நுட்ப தேர்வுகள் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி துவங்கி 25ஆம் தேதி வரை நடைபெறும் என தொழில்நுட்ப கல்வித்துறை அறிவித்தது. தற்போது, ஏற்கனவே அறிவித்த தேதிகளில் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், இந்த தேர்வுக்கான தேதிகள் மாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு – கட்டுப்பாடுகள் தீவிரம்!!
இது குறித்து தொழில்நுட்ப கல்வி இயக்ககம் கூறுகையில், ‘கொரோனா தொற்றின் காரணமாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தப்படவுள்ள தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுகிறது. மாற்றப்பட்ட தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்