10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நுழைவுச்சீட்டு – நாளை வெளியீடு!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை (ஏப்ரல் 3) வெளியிடப்படவுள்ளது.
10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு:
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக மகாராஷ்டிரா அம்மாநிலத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள கொரோனா பரவலில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் நோய் தாக்கம் அதிகமாக உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசு இரவு ஊரடங்கினை சில மாவட்டங்களில் அமல்படுத்தியுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதன்படி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் மே 29 ஆம் தேதி வரையும், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் மே 31 வரை பொதுத்தேர்வு நடக்கவுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் வெளியீடு!!
தற்போது இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்படும் எனவும், தேர்வுகளில் சில மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பொதுத்தேர்வில் செய்முறை தேர்வுகள் எதுவும் நடைபெறாது. அதற்கு பதிலாக ஒப்படைப்புகளை (Assignment) மே 21 முதல் ஜூன் 10 வரை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த முறை 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பொருந்தும். 12 ஆம் வகுப்பில் வர்த்தக மற்றும் மனிதநேயம் பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் அந்தந்த பள்ளிகளில் செய்முறை தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். தேர்வுகள் நடைபெறும் போது பள்ளிகளில் போதிய இடவசதி இல்லையென்றால் அருகில் உள்ள தேர்வு மையங்களை அரசு ஒதுக்கி வழங்கப்படும்.
தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை – முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை!!
மாணவர்களுக்கு தேர்வுகளில் 15 நிமிடம் முதல் 30 நிமிடங்கள் வரை கூடுதல் அவகாசம் வழங்கப்படும். கொரோனா போன்ற காரணங்களால் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு ஜூன் மாதம் தேர்வுகள் நடத்தப்படும். இந்த ஆண்டு பொதுத்தேர்வு வழக்கத்தை விட அரை மணி நேரத்திற்கு முன்பே தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.