இன்று முதல் மீண்டும் மால்கள் மூட உத்தரவு – மகாராஷ்டிரா அரசு!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் மால்கள் மீண்டும் திறப்பதற்கு அரசு அனுமதி அளித்திருந்தது. மால்கள் இரண்டு நாட்களாக செயல்பட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
மால்கள் மூடல்:
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலையின் பாதிப்புகள் ஆரம்ப கட்டத்திலேயே அதிகமாக இருந்தது. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் முழு ஊரடங்கு உத்தரவு மாநிலத்தில் அமலில் இருந்து வந்தது. இந்நிலையில் ஜூலை மாத நிலவரப்படி, கொரோனா பாதிப்புகள் படிப்படியாக மாநிலம் முழுவதும் குறைந்து வந்தது. இதனால் மும்பை உள்ளிட்ட 25 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து முதல்வர் உத்தவ் தாக்கரே மூத்த சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் மாநில கோவிட் -19 பணிக்குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்க்கு பின்னர், மால்கள், மல்டிப்ளெக்ஸ் மற்றும் உணவகங்கள் விரைவில் மகாராஷ்டிராவில் 50% திறனில் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர், அரசு அறிவித்துள்ள கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் மால்கள் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, ஆகஸ்ட் 15ம் தேதி முதல் மால்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று மகாராஷ்டிரா அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை திருத்தி அறிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன்படி, 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஆதார் அட்டை, பான் கார்டு, பள்ளி/கல்லூரி அடையாள அட்டை போன்ற வயது சான்றுக்கான ஆவணத்தை அவர்கள் காட்ட வேண்டும். மேலும், மாலுக்கு வரும் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் அனைவரும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி 14 நாட்கள் முடிந்தவராக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதனால் இரண்டு நாட்கள் செயல்பாட்டுக்கு பின்னர் மீண்டும் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மால்கள் மூடப்படுகிறது.
இன்று முதல் இரவு ஊரடங்கு உத்தரவு நீக்கம் – சண்டிகர் அரசு அறிவிப்பு!
இது தொடர்பாக, இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்கத்தின் (RAI) தலைமை நிர்வாக அதிகாரி குமார் ராஜகோபாலன், மால்களில் பணிபுரியும் ஊழியர்கள் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும் என்று அரசு கடந்த வாரம் கூறியது, ஆனால் நேற்றைய திருத்தப்பட்ட உத்தரவில் மால்களுக்குள் பணிபுரியும் ஊழியர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மிகவும் குறைந்த சதவீத பணியாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதால் மால்கள் முழுமையாக மூடப்படுகிறது என்று கூறியுள்ளார்.