இன்று முதல் இரவு ஊரடங்கு உத்தரவு நீக்கம் – சண்டிகர் அரசு அறிவிப்பு!
சண்டிகரில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால் இன்று முதல் இரவு ஊரடங்கு உத்தரவை நீக்குவதாக அரசு அறிவித்துள்ளது. மேலும், சில தளர்வுகளையும் அறிவித்து உள்ளது.
இரவு ஊரடங்கு நீக்கம்:
சண்டிகரில் முன்னதாக கொரோனா தொற்று பாதிப்புகள் அதிக அளவில் இருந்தது. இதனால் யூனியன் பிரதேசத்தில் கொரோனா கால ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு ஊரடங்கு அமலில் இருந்தது. மேலும், காவல் துறையினர் சண்டிகர் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். பின்னர், மெல்ல பாதிப்புகள் கட்டுக்குள் வரத் தொடங்கியது. இதனால் பாதிப்புகள் குறைந்து உள்ள பகுதிகளில் நிலவரத்தை பொறுத்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தது.
SBI Card வேலைவாய்ப்பு 2021 – பட்டம் பெற்றவர்களுக்கான ஜாக்பாட் வாய்ப்பு!!
மேலும், கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை தினமும் படிப்படியாக குறைந்து வருவதால் அங்குள்ள அரசு பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை ஜூலை 19ம் தேதி முதல் மீண்டும் தொடங்குவதாக அரசு அறிவித்தது. இருப்பினும், சண்டிகர் அரசு அமலில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதல்களை ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பதாக அரசு கடந்த வாரம் அறிவித்தது.
TN Job “FB Group” Join Now
முன்னதாக நகர் முழுவதும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வந்தது. தற்போது தொடர்ந்து பாதிப்புகள் குறைந்து நிலைமை முன்னேற்றம் கண்டுள்ளதால் அங்கு செவ்வாய்கிழமையான இன்று முதல் இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இரவு ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளதால் இனி ஹோட்டல்கள், பார்கள் மற்றும் உணவகங்கள் இரவு 12 மணிக்கு மேல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.