மகாராஷ்டிரா மாநில அரசு பால் விவசாயிகளுக்காக சிறப்பு திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
சிறப்பு திட்டம்
மகாராஷ்டிரா மாநில அரசு பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ. 5 மானியம் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்து மாநில அமைச்சரவை கூட்டத்தில் அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இந்த திட்டமானது மாநில விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த வசதியானது கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் கால்நடை வளர்ப்போருக்கு மட்டுமே கிடைக்கும்.
மாடு மேய்ப்பவர்கள், தனியாரிடம் பால் விற்கும் நபர்கள் இந்தப் பலன் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் இந்த முடிவுக்கு பின் தனியார் பால் விற்பனையாளர்களும் மானியம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். இந்த திட்டத்தின் பலன் ஜன. 11 ஆம் தேதி முதல் பிப். 10 ஆம் தேதி வரை கிடைக்கும். அதன் பின் மாநில அரசு இந்த திட்டத்தை மதிப்பாய்வு செய்து காலக்கெடுவை நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
நடப்பாண்டு 10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றமா? – பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!