சபரிமலை தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – இன்றுடன் மகர விளக்கு நிறைவு!
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் திருக்கோயிலில் நடைபெற்று வந்த மகரவிளக்கு கால தரிசனம் இன்றுடன் முடிவடைவதாக ஐயப்பன் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
தரிசனம் நிறைவு:
உலக புகழ் பெற்ற திருக்கோயில்களில் ஒன்றாக கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் திருக்கோயில் விளங்கி வருகிறது. இத்தகைய சிறப்பு மிக்க திருக்கோயிலில் கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. அதனால் பெரும்பாலான பக்தர்கள் மாலை அணிவித்து சபரிமலை ஐயப்பன் திருக்கோயிலுக்கு தரிசனத்திற்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் திருக்கோயிலில் மகர விளக்கு பூஜை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தற்செயல் விடுப்பு! அரசாணை வெளியீடு!
அதன்படி கடந்த ஜன.14ம் தேதி முதல் மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் நடைபெற்று வருகிறது. அதனால் கடந்த 5 நாட்களாக திருவாபரண அலங்காரத்துடன் இருந்த ஐயப்பனை பக்தர்கள் தரிசித்து சென்றுள்ளனர். மேலும் மாலை அணிந்து வரும் பக்தர்கள் நெய் அபிஷேகம் செய்யவும் அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த மகரவிளக்கு கால தரிசனம் இன்றுடன் முடிவடைய உள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. இன்று ஒரு நாள் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
புதிய ஊதியக் குறியீடு 2022-23 | PF முதல் அமலாக உள்ள மாற்றங்கள்! முழு விபரம் இதோ!
அதனை தொடர்ந்து நாளை ஜன.20ம் தேதி காலை 6.30 மணியளவில் சபரிமலை ஐயப்பன் திருக்கோயில் நடை சாத்தப்படும் என்றும், மீண்டும் மாசி மாத பூஜைக்காக வரும் பிப்.12ம் தேதி கோயில் நடை திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அதனால் சபரிமலை தரிசனத்திற்கு செல்ல திட்டமிடும் பக்தர்கள் கோயில் நிர்வாகத்தின் அறிவிப்பின் பேரில் மாசி மாத பூஜை நடைபெறும் நாளன்று கோயிலுக்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.