தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தற்செயல் விடுப்பு! அரசாணை வெளியீடு!

0
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - தற்செயல் விடுப்பு! அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - தற்செயல் விடுப்பு! அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தற்செயல் விடுப்பு! அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருவதால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு தற்செயல் விடுமுறை வழங்குவது குறித்து அரசாணை வெளியாகி உள்ளது.

கொரோனா பாதிப்பு:

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது மாநில அரசுகளும் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி இருக்கிறது. தமிழகத்திலும் கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி பாதிப்பு 24 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. அதனால் அரசு இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமை ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. மேலும் அனைத்து மக்களும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என சனிக்கிழமைகளில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் ஜன்தன் யோஜனா திட்டம் – கவனிக்க வேண்டிய முக்கிய விவரங்கள் இதோ!

கொரோனா பாதிப்பு காரணமாக அரசு ஊழியர்கள் பாதிக்கப்படுவதால் அவர்களுக்கு தற்செயல் விடுப்பு வழங்குவது குறித்தும், யாரெல்லாம் இந்த விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்பது குறித்தும் வருவாய் & பேரிடர் மேலாண்மைத் துறை அரசாணை எண் 304 இரண்டு நாட்களுக்கு முன் வெளியானது. அதன் படி, அரசு ஊழியர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாலோ / குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் தொற்று பாதிப்பிற்குள்ளாகிய வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தாலோ அவரது முழுமையான சிகிச்சை / வீட்டுத் தனிமைப்படுத்தல் காலத்தை சிறப்புத் தற்செயல் விடுப்பின்கீழ் அனுமதிக்கலாம். இதற்குச் சிகிச்சை பெற்ற மருத்துவமனையின் மருத்துவர் / வட்டார மருத்துவ அலுவலரின் சான்று கட்டாயம் பெற வேண்டும்.

மேற்கண்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்ட நடைமுறைகள் யாவும் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ் ஊரடங்கு திரும்பப் பெறப்படும் வரை பின்பற்றப்பட வேண்டும். பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ் கோவிட் பெருந்தொற்று பாதிப்பின் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு 25.03.2020 முதல் தற்போது வரை முழுமையாகத் திரும்பப்பெறப்படவே இல்லை. இடையிடையே தளர்வுகள் மட்டுமே பிறப்பிக்கப்பட்டது. அதனால் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழான பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் காலமே இது என்பதால் தற்போதும் மேற்படி அரசாணைப்படி சிறப்புத் தற்செயல் விடுப்பு உண்டு. மேலும் முதல் அலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்.

Post Office இல் தினமும் ரூ.50 முதலீடு செய்தால் 35 லட்ச ரூபாய் ரிட்டன்ஸ் – சூப்பரான சேமிப்பு திட்டம்!

ஆனால் இந்த அலையில் தனிப்படுத்தும் நாட்களை ஊழியரின் வசிப்பிடப் பகுதிக்கான மருத்துவ அலுவலரே முடிவு செய்வார். அதற்கான சான்றளிக்கும் பொறுப்பும் அவரைச் சார்ந்தது ஆகும். மொத்தத்தில் கொரோனா பாதித்த நபர் & அவருடைய குடும்ப உறுப்பினருக்கு, தொற்று உறுதி செய்யப்பட்ட நாள் முதல் சிகிச்சை முடிந்து வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருக்க மருத்துவர் பரிந்துரைக்கும் நாள் வரை சிறப்புத் தற்செயல் விடுப்பு அனுமதிக்க வேண்டும். மேலும், தொற்று பாதித்த நபர் / குடும்பத்தில் யாரேனும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் சிறப்புத் தற்செயல் விடுப்பிற்கு தொலைபேசி வாயிலாகவே விண்ணப்பிக்கலாம். விடுப்பு முடிந்து பணியேற்கும் நாளில் சிகிச்சை அறிக்கையின் நகல் / வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருக்க வட்டார மருத்துவ அலுவலர் பரிந்துரைத்த கடிதத்துடன் சிறப்புத் தற்செயல் விடுப்பிற்கான விண்ணப்பத்தையும் அலுவலகத்தில் சமர்ப்பித்துக் கொள்ளலாம் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!