தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் இலேசான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் நிலவும் வானிலை நிலவரத்தை பற்றி சென்னை வானிலை மையம் துல்லியமாக தகவல் தெரிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து இன்று முதல் 23ம் தேதிக்கான வானிலை நிலவரத்தை பற்றி தகவலை தெரிவித்துள்ளது.
வானிலை தகவல்
தமிழகத்தில் கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து கொண்டிருந்தது. அதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து டிசம்பர் மாத இறுதியில் மழையின் அளவு குறைந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அத்துடன் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவித்துள்ளது.
19.01.2022: நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சபரிமலை தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – இன்றுடன் மகர விளக்கு நிறைவு!
20.01.2022 முதல் 23.01.2022 வரை: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
19.01.22, 20.01.2022: நீலகிரி, கோவை, சேலம், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களின் மலை பகுதிகளில் அதிகாலை நேரங்களில் இலேசான பனிமூட்டம் காணப்படும் .
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.