மதுரை ரயில் தீ விபத்தால் 9 பேர் பலி – ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு!
இன்று அதிகாலை மதுரை ரயில் நிலையத்தில் தீ விபத்து நடைபெற்றுள்ள நிலையில் இறந்தவரின் குடும்பங்களுக்கு ரூ.10லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரயில் தீ விபத்து:
உத்திரபிரதேச மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்த சுற்றுலா ரயில் இன்று அதிகாலை விபத்துக்குள்ளான நிலையில் தற்போது வரை 9 பேர் பலியாகி உள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. அதாவது, மதுரை ரயில் நிலையத்திலிருந்து கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தொலைவில் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென சிலிண்டர் வெடித்து ரயில் முழுவதும் தீ பிடித்ததாக தற்போது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. மேலும், ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதும் 60க்கும் மேற்பட்ட பயணிகள் தப்பி ஓடி உள்ளதாகவும், கிட்டத்தட்ட 30 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளதாகவும், 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழக அரசு காவல்துறையில் 750 உதவி ஆய்வாளர் காலிப்பணியிடங்கள் – இன்று (ஆக.26) எழுத்து தேர்வு!
மேலும், தீயணைப்பு படையினரும் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து, தீ விபத்தில் காயம் அடைந்த பயணிகள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. மேலும், தீ விபத்தால் உயிரிழந்த அனைத்து பயணிகளும் உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில், ரயில் தீ விபத்தால் உயிரிழந்த பயணிகளின் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீ விபத்து குறித்து ஏதேனும் தகவலை பெற விரும்பினால் 9360552608, 8015681915 என்கிற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.