மதுரை & கோவை மெட்ரோ ரயில் சேவை – திட்ட அறிக்கை அரசிடம் சமர்ப்பிப்பு!
தமிழகத்தில் சென்னையை தொடர்ந்து மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது. இது தொடர்பான திட்ட அறிக்கை இன்று தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
திட்ட அறிக்கை:
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் இதனை விரிவுபடுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மதுரை மற்றும் மற்றும் கோவையிலும் மெட்ரோ ரயில் சேவை திட்டத்தை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. மதுரையில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரையிலும் கோவையில் அவிநாசி சாலை, சத்தி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் ஆகிய சாலைகள் வழியாக மெட்ரோ ரயில் சேவை துவங்கப்படவுள்ளது.
தஞ்சாவூர் TNPSC பயிற்சி மையத்தில் System Admin பணி – சூப்பர் சம்பளத்துடன் அருமையான வாய்ப்பு!
இந்த மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கான சாத்திய கூறுகளை ஆராயும் பணி துரிதமாக நடைபெற்றது. இந்த நிலையில் இன்று (ஜூலை. 14) மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாக வைத்து அடுத்த கட்ட பணிகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.