மதுரை மேம்பால கட்டுமான விபத்து – நிதி அமைச்சர் நேரில் ஆய்வு!
மதுரையில் மேம்பால கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், விபத்து நடந்த இடத்திற்கு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
கட்டுமான விபத்து:
மத்திய அரசின் திட்டத்தின்கீழ், 2018ஆம் ஆண்டில் மதுரை நத்தம் சாலையில் 678 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. மதுரை தல்லாகுளம் – செட்டிகுளம் இடையே 7.3 கிலோமீட்டர் தொலைவில் இந்த பாலம் காட்டப்படுகிறது. ம் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் மதுரையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றது என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் பலத்த காற்றுடன் வெளுத்து வாங்கும் மழை – வெள்ளக்காடானது மாநகரம்!
நாராயணபுரம் பகுதியில் கட்டுமான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டபோது, மேம்பால சுவர் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. மேம்பால சுவரை இரு தூண்களில் இணைக்கும்போது, ஹைட்ராலிக் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து தீயணைப்புப் படையினர் உட்பட 40க்கும் மேற்பட்டோர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் விபத்து நடந்த இடத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் அவர்களும் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டார்.
TN Job “FB Group” Join Now
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் பாலத்தை தூக்கி வைக்கும் மிகப்பெரிய பணியில் 2 ஊழியர்கள் மட்டுமே ஈடுபட்டது கேள்வி எழுப்புகிறது என்றும் அதிகாரிகள் மூலம் ஒப்பந்ததாரரிடம் விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தார். மேலும் தகுந்த பயிற்சி அளிக்காமல் ஊழியர்களை ஒப்பந்ததாரர்கள் பணியில் வைத்ததாகவும் இதுவே விபத்திற்கான காரணம் என்றும் இது குறித்து விசாரணை செய்து ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.