சென்னையில் பலத்த காற்றுடன் வெளுத்து வாங்கும் மழை – வெள்ளக்காடானது மாநகரம்!
சென்னை முழுவதும் தற்போது பலத்தக்காற்றுடன் கனத்த மழை பெய்து வருவகிறது. இதனால் தலைநகரம் குளுமை அடைந்துள்ளது.
கனமழை:
சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என அறிவித்துள்ளது. இதனால் வரும் 30ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. லகிரி, கோவையில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாகத் தமிழ்நாட்டில் பரவலான இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
வருமான வரி தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் அளிக்கப்படுமா? – அதிகாரியின் தகவல்!
இந்நிலையில் தற்பொழுது சென்னையில் பல்வேறு இடங்களில் கன மழை பொழிந்து வருகிறது. சென்னையின் திநகர், கிண்டி, மீனம்பாக்கம், பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் பெருங்களத்தூர், வண்டலூர், பூந்தமல்லி, திருவேற்காடு, காட்டுப்பாக்கம், திருநின்றவூர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. கோயம்பேடு, வடபழனி, அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், பாடி, கொரட்டூர் பகுதியிலும் மழை பொழிந்து வருகிறது. கனமழை காரணமாக நகரின் பல்வேறு இடங்களிலும் சாலைகளில் நீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளில் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
மேலும், கனமழை காரணமாக ஓரிரு இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு பருவ மழை வழக்கத்தை விட அதிகமாகப் பெய்துள்ளதால், சென்னைக்கு நீர் ஆதாரமாகத் திகழும் அனைத்து ஏரிகளும் நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை மட்டுமல்லாது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டையில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு மழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.