தமிழகத்தில் தீவிரமாய் பரவும் Madras Eye – மருத்துவர்கள் எச்சரிக்கை!
தமிழகத்தில் தற்போது காலநிலை சற்று மாற்றமடைந்துள்ளதால் மெட்ராஸ் ஐ தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், மெட்ராஸ் ஐ நோயின் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவர்களை சந்திக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மெட்ராஸ் ஐ:
சென்னையில் தற்போது மெட்ராஸ் ஐ வேகமாக பரவி வருவதாக மருத்துவ நிர்வாகம் எச்சரித்துள்ளது. அதாவது, நாள் ஒன்றிற்கு மட்டுமே 50க்கும் மேற்பட்டவர்கள் மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வந்து கொண்டிருக்கின்றனர். அதாவது, மெட்ராஸ் ஐ காற்று மூலமாகவும், மாசு மூலமாகவும் ஏற்படுவதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். தற்போது காலநிலை மாற்றத்தால் பலரும் இந்த மெட்ராஸ் ஐ நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதாவது, கண் விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் வைரஸ் தொற்று ஏற்படுகிறது.
Exams Daily Mobile App Download
கண் எரிச்சல், விழிப்பகுதியில் திடீரென சிவந்து போதல், கண்ணில் நீர் சுரந்து கொண்டே இருப்பது மற்றும் கண்ணை கொஞ்சம் கூட திறக்க முடியாத அளவுக்கு இமைப்பகுதி ஒட்டிக் கொள்தல் ஆகியவை மெட்ராஸ் ஐ நோயின் அறிகுறிகளாகும். மேலும், வெளிச்சத்தை கொஞ்சம் கூட சமாளிக்க முடியாமல் கண் கூசும். மேலும், இந்த மெட்ராஸ் ஐ நோய் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவிவிடும். அதாவது, மெட்ராஸ் ஐ தொற்றால் பாதிப்படைந்த ஒருவர் பயன்படுத்திய கைக்குட்டையை மற்றவர் பயன்படுத்தினாலே எளிதில் நோய்த் தொற்று பரவிவிடுகிறது.
தமிழகத்தில் ஜூலை 30ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – முழு விவரங்கள் இதோ
மேலும், சாதாரண தொற்று என்றாலும் கூட ஒரு சிலருக்கு காய்ச்சல், சளி கூட ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதுமட்டுமல்லாமல், சாதாரண கண் வலிதானே என்று நினைத்து வீட்டில் இருந்தபடியே மருத்துவர்களின் ஆலோசனை எதுவும் பெறாமல் கைவைத்தியம் எதுவும் பார்க்கக்கூடாது எனவும், கண் சொட்டு மருந்துகளை பயன்படுத்த கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி செய்வதனால் சில சமயங்களில் கருவிழி கூட பாதிப்படைய அதிக வாய்ப்பிருக்கிறது. இதனால், மெட்ராஸ் ஐ நோய் அறிகுறிகள் தென்பட்டதுமே மருத்துவரை அணுக வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.