ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச சிலிண்டர்.. வெளியானது ஜாக்பாட் அறிவிப்பு!

0
ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச சிலிண்டர்.. வெளியானது ஜாக்பாட் அறிவிப்பு!

உத்தரகாண்ட் மாநிலத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சலுகை யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பது குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.

இலவச சிலிண்டர்:

உத்தரகாண்ட் மாநிலத்தில் அந்தியோதயா ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு சார்பாக இலவச சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரு ஆண்டில் ஏப்ரல் – ஜூலை வரையில் முதல் சிலிண்டரும் ஆகஸ்ட் – நவம்பர் வரை 2 – வது மேலும் டிசம்பர் மாதம் 3 – வது சிலிண்டர் இலவசமாக வழங்கப்படுகிறது.

மே 1ம் தேதி முதல் தொடங்கும் கோடை விடுமுறை.. ஜூன் 12ல் மீண்டும் பள்ளிகள் திறப்பு!

இந்த சிலிண்டர் பெறும் போது உடனடியாக பணம் செலுத்த வேண்டும். பிறகு இந்த பணம் அவரது வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர் உரிய காலத்தில் சிலிண்டரை பெறவில்லை என்றால் உங்களுக்கான சலுகை நிறுத்தப்பட்டு விடும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது ரேஷன் கார்டுடன் கேஸ் சிலிண்டரை இணைக்க வேண்டும். இல்லையெனில் இலவச சிலிண்டர் உங்களுக்கு கிடைக்காது. தற்போது அம்மாநிலத்தில் அந்தியோதயா ரேஷன் கார்டுடன் கேஸ் சிலிண்டரை இணைதுள்ளவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!