LPG வர்த்தக சிலிண்டர் விலை ரூ.84 அதிகரிப்பு – ரூ.1,687.50 ஆக நிர்ணயம்!
இந்தியாவில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 25 உயர்ந்துள்ளது. இதனால் வரும் காலங்களில் ஒரு சிலிண்டர் விலை 1000 ரூபாயை தொடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சிலிண்டர் விலை உயர்வு:
இந்தியாவில் அத்தியாவசிய தேவைகளுள் ஒன்றாகிய பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. சென்னை, மும்பை, பெங்களூர், கல்கத்தா போன்ற பெரு நகரங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. இது வாகன ஓட்டிகளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
தமிழ்நாடு மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு – மின்னகம் நுகர்வோர் சேவை!
இதனை தொடர்ந்து தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதலே விலை ஏற்றம் செய்யப்பட்டு வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. இதன் படி நேற்று முதல் கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 25 அதிகரித்துள்ளது. கடைசியாக மார்ச் 1ம் தேதி ரூ.25 ஏற்றப்பட்டு தமிழகத்தில் ஒரு சிலிண்டரின் விலை ரூபாய் 835 ஆக விற்கபட்டது.
TN Job “FB Group” Join Now
தற்போது சென்னையில் இந்த மாதம் சிலிண்டரின் விலை ரூ.25.50 அதிகரித்து ரூ.850.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதே போல் வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை ரூ.84 அதிகரித்து ரூபாய் 1,687.50 க்கு விற்கப்படுகிறது. இதனால் வரும் காலங்களில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை 1000 ரூபாயை தொடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் சிலிண்டர் மானிய தொகையும் குறைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான எரிவாயு நுகர்வோர்களுக்கு மானிய தொகை சரியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதில்லை என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் ஏழை, எளிய மக்கள் கேஸ் சிலிண்டர்கள் வாங்க இயலாத நிலை உருவாகும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னையில் 85.50ரூபாய் என்றால் எங்கள் கரூரில் பாரத் கேஸ் ஒரு ஸ்லிண்டர் விலை 89.96 ரூபாய் அது அநியாயம் இல்லையா மக்கள் கொராணா காரணமாக உணவிற்கே கஷ்டபடும்போது விலையேற்றம் மக்களை வெகுவாக பாதிக்கிறது