தமிழகத்தில் குறைந்த 11ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் – கல்வித்துறை அறிவிப்பு!
10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 20-ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்த நிலையில் இன்று 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரைக்கும் 77.54% சதவீத மாணவ மாணவிகள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி முடிவுகள்:
தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. இந்த ஆண்டு ஓரளவுக்கு கொரோனா குறைந்ததும் பழையபடி 6 முதல் 12 வரை பயின்ற பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 20ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்தது. கடந்த சில கல்வியாண்டுகளின் தேர்வு முடிவுகளோடு ஒப்பிட்டு பார்க்கையில் இந்த ஆண்டு குறைவாகவே மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொதுத் தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு வரும் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் மறுதேர்வு நடைபெற இருக்கிறது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களோடு பார்க்கும் போது சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்ச்சி விகிதம் மிகவும் குறைந்துள்ளது. இந்தாண்டு நடத்தப்பட்ட பொதுத்தேர்வை 3,168 மாணவர்கள், 3507 மாணவியர்கள் என மொத்தமாக 6673 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர். தேர்வெழுதிய மாணவர்களில் 2070 மாணவர்கள் 3.104 மாணவியர்கள் என மொத்தமாக 5,174 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
EPFO கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – PF இருப்பை எவ்வாறு சரிபார்க்கலாம்? முழு விவரம்!
வணிகவியல் பாடத்தில் 1மாணவரும், கணக்கு பதிவியல் பாடத்தில் 5 மாணவர்களும், மற்றும் கணினி பயன்பாடுகள் பாடத்தில் 3 மாணவ மாணவியரும் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளனர். 600 க்கு 551க்கு மேல்14 மாணவ மாணவியர்களும், 501லிருந்து 550 வரை 69 மாணவ மாணவியர்களும், 451லிருந்து 500க்கு மேல் 175 மாணவ மாணவியர்களும் பெற்றுள்ளனர். 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ மாணவியர்களுக்கு கூடிய விரைவிலேயே மறு தேர்வு வைக்கப்படும் எனவும், அது குறித்தான அறிவிப்பு கூடிய விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.