SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – குறைந்த வட்டி கடன் திட்டம்!
கொரோனா 2 ஆம் அலை காரணமாக வங்கி வாடிக்கையாளர்கள் மேற்கொண்டு வரும் நிதி மற்றும் மருத்துவ நெருக்கடிகளுக்கு கடன் உதவி அளிக்கும் வகையில் புதிய கடன் திட்டத்தை SBI வங்கி அறிவித்துள்ளது.
கடன் திட்டம்
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கென சிறப்பு நிதியுதவி அளிக்கும் வகையில் புதிய கடன் திட்டத்தை SBI வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் படி ‘SBI கவச்’ திட்டத்தின் கீழ் தனிநபர் கடனை குறைந்த அளவு வட்டி வீதத்தில் பெற்றுக்கொள்ள முடியும். இதற்கு முன்னதாக கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் பொதுத்துறை வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் கடன் வழங்கலாம் என ரிசர்வ் வங்கி அனுமதி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 20 முதல் இரவு நேர முழு ஊரடங்கு அமல்? மாநில அரசு திட்டம்!
அதன் படி SBI தற்போது ஒரு புதிய கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டம் மூலம் கொலேட்ரல் இல்லாமல் கடன் வழங்கப்படுவதால், அனைத்து தரப்பு மக்களுக்கும் இது பயனளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர ஏற்கனவே கொரோனா தொற்று சிகிச்சைக்கான செலவுகளையும் இத்திட்டத்தின் மூலம் சரி செய்ய முடியும். அந்த வகையில் ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ், SBI வங்கி கடன் வழங்குகிறது.
இதில் கடன் பெற விரும்புபவர்கள் அளிக்கவேண்டிய ஆவணங்களில் முக்கியமாக, கொரோனா பாசிடிவ் அறிக்கையை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். இதன் பிறகு தான் ஒருவர் கடன் பெறுவதற்கான மற்ற வேலைகளை இவ்வங்கி துவங்கும். மேலும் ஒருவர் இத்திட்டத்தின் கீழ் 25 ஆயிரம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை, குறைந்த வட்டியில் அதாவது 60 மாதங்கள் வரை திரும்ப செலுத்தும் வகையில் கடன் பெற்றுக்கொள்ளலாம்.
TN Job “FB Group” Join Now
இது தவிர ‘SBI கவச்’ திட்டத்தின் மூலம் பெறும் கடனுக்கு 8.5% வட்டி கொடுக்கப்படுகிறது. மேலும் இந்த கடனுக்கு 3 மாதம் EMI செலுத்துவதற்கான சலுகையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கென செயலாக்க கட்டணம் எதுவும் இல்லை. அந்த வகையில் வாடிக்கையாளர்கள் SBI வங்கி கிளைகள் அல்லது யூனோ செயலியின் மூலமாக முன் ஒப்புதல் பெற்று கடன் தொகையை பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.