ஆகஸ்ட் 28 முதல் நீண்ட வழித்தட பேருந்து சேவைகள் தொடக்கம் – அமைச்சர் அறிவிப்பு!
கொரோனா பரவல் காரணமாக நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீண்ட வழித்தட பேருந்து சேவைகள் நாளை முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்.
பேருந்து சேவைகள்:
கொரோனா தொற்றின் 2ம் அலை பரவல் காரணமாக புதுச்சேரியில் கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. இதனால் மாநிலம் முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டது. அனைத்து கல்வி நிறுவனங்கள், தொழிலகங்களும் மூடப்பட்டது. பொதுப்போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து கட்டுப்பாடுகளின் விளைவினால் நோய்த்தொற்று பாதிப்பு குறைந்து வந்தது. இதனால் கடந்த மாதம் முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் படிப்படியாக அளிக்கப்பட்டு வருகிறது. பொதுப்போக்குவரத்துக்கு இருந்த தடை நீக்கப்பட்டு பேருந்துகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.
14 ஆண்டு கால சிறை தண்டனைக்கு பின் நிரபராதி என தீர்ப்பு – ஐகோர்ட்டில் அதிர்ச்சி சம்பவம்!
இந்நிலையில் புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா நாளை முதல் நீண்ட வழித்தட பேருந்து சேவைகள் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள அறிக்கையில் புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் (PRTC) மூலம் புதுச்சேரி – பெங்களூரு, புதுச்சேரி – திருப்பதி, புதுச்சேரி – குமுளி மற்றும் புதுச்சேரி – ஓசூர் ஆகிய வழித்தடங்களில் பேருந்துகள் நாளை முதல் இயக்கப்பட இருக்கின்றது.
TN Job “FB Group” Join Now
அரசின் அறிக்கையில் மேலும் சபாநாயகர், சமூக நல அமைச்சர் ஆகியோரின் கோரிக்கையின் படி, புதுச்சேரி கிராமப் பகுதிகளில் நோனாங்குப்பம் – நாவற்குளம், அபிஷேகப்பாக்கம் – கீழ் அக்ராஹரம் மற்றும் புவன்கரே வீதி ஆகிய வழித்தடங்களில் PRTC பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என்று போக்குவரத்துத் துறை அமைச்சரின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.