14 ஆண்டு கால சிறை தண்டனைக்கு பின் நிரபராதி என தீர்ப்பு – ஐகோர்ட்டில் அதிர்ச்சி சம்பவம்!
தனது குழந்தையை தானே கொலை செய்து ஆயுள் தண்டனை பெற்ற தாயின் தண்டனையை ரத்து செய்து, அவரை நிரபராதி என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆயுள் தண்டனை ரத்து:
திருச்சி மாவட்டம் தாத்தையங்கார் பேட்டை என்ற ஊரைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கும், சகுந்தலா என்ற பெண்ணிற்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் இவர்களுக்கு, 2 மகள்கள் பிறந்தனர். இதில், ஒரு மகளுக்கு ஒன்றரை வயது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் பிறகு, கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. இதனால் சகுந்தலா கணவரிடம் கோபித்து கொண்டு கடந்த 2002ம் ஆண்டு கணவன் வீட்டை விட்டு வெளியேறி, அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.
1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – முதல்வர் ஆலோசனை!
இதற்கு அடுத்த நாளே தனது ஒன்றரை வயது குழந்தையை கொலை செய்து கிணற்றில் வீசியதாக சகுந்தலா திருச்சி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த திருச்சி மாவட்ட நீதிமன்றம் சகுந்தலாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. இதனை அடுத்து இந்த தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என சகுந்தலா, 2014-ல் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் 14 ஆண்டுகள் சகுந்தலா சிறைவாசம் அனுபவித்தார். தற்போது, இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் சகுந்தலாவுக்கு ஜாமீன் வழங்கி, அவர் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
TN Job “FB Group” Join Now
இதனை அடுத்து இந்த வழக்கு நீதிபதிகள் பாரதிதாசன், நிஷா பானு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் சகுந்தலா சார்பில் வாதாடிய வழக்கறிஞர், இந்த வழக்கில் குழந்தையின் பிரேத மருத்துவ அறிக்கையில் குழந்தையின் நுரையீரல் மற்றும் குடலில் தண்ணீர் இருந்ததற்கான சான்றுகள் இல்லை. மேலும், அவர் கணவர் வீட்டை விட்டு வெளியேறிய போது தனியாக மட்டுமே சென்றதாகவும், குழந்தையை எடுத்து செல்லவில்லை எனவும் வாதிட்டார். இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், சகுந்தலாவின் வழக்கறிஞர் தெரிவித்த சிறிய தகவல் கூட கீழமை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை என்று அதிருப்தி தெரிவித்து, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சகுந்தலாவின் ஆயுள் தண்டனையை ரத்து செய்து, அவருக்கு விடுதலை அளிப்பதாகவும் தீர்ப்பு வழங்கினர்.