மார்ச் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு – முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்! அரசு அறிவிப்பு!
புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு சட்டப்படி அபராதம் விதிக்கப்படும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஊரடங்கு:
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா என்னும் கொடிய வகை வைரஸ் தொற்று தீவிரமெடுத்து பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மத்திய மாநில அரசு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைத்து மாநிலங்களிலும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்தல், அவ்வப்போது கிருமி நாசினிகளை பயன்படுத்துதல் போன்றவைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. மேலும் மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வந்தது.
தமிழகத்திற்கு மார்ச் 4 அதி கனமழைக்கு வாய்ப்பு, ஆரஞ்சு அலெர்ட் – வானிலை மையம் எச்சரிக்கை!
அரசின் இந்த முயற்சிகளால் கொரோனா பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வருகிறது. அதனால் அரசுகள் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அளித்து வருகிறது. மேலும் இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கப்பட்டும் வருகிறது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்புவோர் கவனத்திற்கு – IRCTC, ஆதார் இணைப்பு வழிமுறைகள்!
இருப்பினும் பொது மக்கள் கூடும் இடங்கள் மற்றும் ஊழியர்கள் பணிபுரியும் இடங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேலும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் வெளியில் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.