முழு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மே 23ம் தேதி அறிவிப்பு – மாநில முதல்வர் உறுதி!!
முழு ஊரடங்கு உத்தரவை நீடிப்பது தொடர்பான அறிவிப்பு மே 23ம் தேதி அன்று அறிவிக்கப்படும் என்று கர்நாடகா மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
முழு ஊரடங்கு நீட்டிப்பு:
கர்நாடகா மாநிலத்தில் கடந்த திங்களன்று நிலவரப்படி, ஒரு நாளில் 8,676 பேருக்கு புதிதாக தொற்று பாதித்துள்ளது. இதனால் மாநிலத்தில் சிகிச்சையில் உள்ள 3,40,965 நோயாளிகளுடன் சேர்த்து மொத்தம் 10,73,072 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 24 மணி நேரத்தில் 31,795 பேர் குணமடைந்துள்ளனர். ஒரு நாளில் 7 மாவட்டங்களில் 1,000க்கும் மேலானவர்களுக்கு தொற்று பாதித்துள்ளது.
5 மாவட்டங்களில் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு – மாநில அரசு அறிவிப்பு!!
நோய் தடுப்பு நடவடிக்கையாக ஏப்ரல் 27ம் தேதி முதல் மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மே 24ம் தேதியுடன் ஊரடங்கு முடிய உள்ள நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு மே 23ம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். ஊரடங்கு காலத்தில் காலை 6 மணி முதல் 10 மணி வரை அத்தியாவசிய கடைகள் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும், 494 கோடி ரூபாய் செலவில் கர்நாடக கட்டிட மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு தலா ரூ.3,000 வழங்கப்படும் என்றும், அமைப்புசாரா துறையின் கீழ் உள்ள முடிதிருத்தும் தொழிலாளர்கள், வாஷர்மேன், தையல்காரர், ராக்பிக்கர்கள், வீட்டுத் தொழிலாளர்கள், கபிலர்கள் போன்றவர்களுக்கு தலா ரூ .2,000 வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.