நாடு முழுவதும் மார்ச் 28 முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமல் – பிரதமருடன் ஆலோசனை!
உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸின் தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதனால் மார்ச் 28 முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த இருப்பதாக பிரதமர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மீண்டும் முழு ஊரடங்கு:
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் உலக நாடுகள் பல கொரோனா வைரஸின் கோர பிடியில் சிக்கி தவித்து வருகிறது. இரண்டு ஆண்டுகளாக முதல், இரண்டாம், மூன்றாம் அலையால் ஏகப்பட்ட மக்கள் தங்களது உறவுகளை இழந்து தவித்து வருகின்றனர். சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், நெதர்லாந்து, ஆஸ்திரியா போன்ற நாடுகளை அதிகம் தாக்கியது. அதன் பின் இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது.
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அரசு எடுக்கப்போகும் முடிவு!
தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் பலர் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் மூன்று அலைகளின் தாக்கத்தில் இருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில் கடந்த சில வாரங்களாக சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக ஜிலின், சாங்சுன் உள்ளிட்ட நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக ஏற்ற தாழ்வுடன் இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், சுமார் 35 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 20 பேர் உயிரிழந்துள்ளனர்.கடந்த 23 ஆம் தேதி முதல் தான் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து பல தளர்வுகளை நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே அறிவித்தார். தற்போது மீண்டும் பாதிப்பு அதிகரிப்பதை அடுத்து சுகாதாரத் துறையினர் அதிர்ச்சியில் இருக்கின்றனர். அதனால் மேலும் கூடுதல் கட்டுப்பாடுகள் பற்றியும், மார்ச் 28 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவது குறித்தும் பிரதமர் மார்க் ரூட்டேவுடன், சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்த இருக்கின்றனர்.