தமிழகத்தில் நாளை (டிச.22) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
நீலகிரி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தின் மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் 22 (நாளை) உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் எஸ்.பி அம்ரித் உத்தரவு பிறப்பித்துள்ளார். கோத்தகிரி பகுதியில் உள்ள படுகர் இன மக்களின் இன கடவுள் ஹெத்தையம்மனை வழிபடும் பொருட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தை மாதம் ஹெத்தை ஹப்பா என்று அழைக்கப்படும் ஹெத்தையம்மன் கோவிலில் திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. இந்த திருவிழா கடந்த ஒரு மாதத்திற்கு முதலே செங்கோல் நாட்டுதல் நிகழ்வுடன் தொடங்கப்பட்டது.
மாநில அரசு ஊழியர்களுக்கு 5.24% அகவிலைப்படி (DA) உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!
ஹெத்தையம்மன் என்பது படுக மொழியில் பாட்டியம்மா என்று பொருள் தரும். இதனை தாய் வழி வந்த குலதெய்வம் என படுக சமூகத்தை சார்ந்த மக்கள் கூறி வருகின்றனர். இந்த திருவிழாவிற்கு 25 நாட்களுக்கு முன்னர் விரதம் இருத்தல், ஒவ்வொரு விழாக்காலங்களில் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் அம்மன் அருள்வாக்கு கூறுதல் ஆகிய நிகழ்வுகள் இடம் பெறுகின்றன. படுகர் இனத்தவர் பாரம்பரிய உடை மற்றும் பாரம்பரிய வண்ண குடைகளுடன் மடிமனை பகுதிக்கு சென்று அங்கு தங்கி அம்மனை வழிபாடு செய்கின்றனர்.
8ம் வகுப்பு முடித்தவர்கள் மாத வருமானத்திற்கு வழி சொல்லும் Post Office – முழு விபரங்கள் இதோ!
இவ்விழாவின் போது கோத்தகிரியை அடுத்த குரங்காடு சீமைக்குட்பட்ட பேரகணி, பெத்தளா, பெப்பேன், ஒன்னதலை, கூக்கல், சின்ன குன்னூர், ஹெப்பநாடு ஆகிய ஊர்களைச் சேர்ந்த பக்தர்கள் அனைவரும் விழாவை சிறப்பிக்கும் விதமாக ஊர்வலமாகச் செல்கின்றனர். எனவே நீலகிரி மாவட்ட உள்ளூர் நகரவாசிகளுக்கு நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சமன் செய்யும் விதத்தில் ஜனவரி 8 அன்று வேலை நாளாக அறிவித்துள்ளது மாவட்ட நிர்வாகம்.