50 லட்ச தெருவோர வியாபாரிகளுக்கு கடனுதவி – மத்திய அரசின் புதிய திட்டம்!
மாநிலம் முழுவதும் பிஎம் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் 50லட்சத்திற்கும் அதிகமான தெருவோர வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
கடனுதவி:
இந்தியாவில் பிரதமரின் ஸ்வநிதி திட்டம் பொதுமக்களின் மத்தியில் நல்ல பொருளாதார வளர்ச்சியை கொண்டு வருவதில் முழு பங்காற்றி வருகிறது. இந்த திட்டத்தினை மேலும் விரிவாக்கும் நோக்கில் பல உயர்மட்ட மறுஆய்வு மற்றும் கண்காணிப்பு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் பிரச்சாரம் அமைக்கப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
இதன் முடிவில், பிஎம் ஸ்வநிதி திட்டத்தின் மூலமாக 50 லட்சத்துக்கும் அதிகமான தெருவோர வியாபாரிகள் பயன்பெறும் வகையில் 65.75 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கடன் வழங்குதலில் பொதுத்துறை வங்கிகள் முக்கிய பங்கினை ஆற்றியுள்ளனர்.
பள்ளி மாணவர்கள் தற்கொலை நிகழ்வு – நல குழு அமைக்க மத்திய அரசு உத்தரவு!
இந்த ஊக்குவிப்பின் காரணத்தினால் நாடு முழுவதும் புதிதாக 12 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய விற்பனையாளர்கள் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், தெருவோர வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு கடன் வழங்கவும், புது தொழிலை நடத்த ஊக்குவிக்கவும் அடுத்தடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.