பள்ளி மாணவர்கள் தற்கொலை நிகழ்வு – நல குழு அமைக்க மத்திய அரசு உத்தரவு!
இந்தியாவில் பல்வேறு காரணங்களால் பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு அதிகரித்துள்ளது. இதனை தடுக்க பள்ளிகளில் நல குழு உருவாக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நலக்குழு:
இந்தியாவில் பள்ளி மாணவர்கள் தேர்வில் தோல்வியுறுதல், சக மாணவர்கள் இடையேயான பிரச்சனை குடும்ப ரீதியிலான பிரச்சனை, மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களாக தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு அதிகரித்து வருகிறது. அண்மை காலமாக நீட் தேர்வு உள்ளிட்ட தேர்வு முடிவுகள் வெளியாகும் போது பல மாணவர்கள் தற்கொலை செய்து செய்திகளை நாம் கேட்டிருப்போம். கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் சுமார் 13,000 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது.
சமையல் கேஸ் சிலிண்ட்ருக்கான மானியம் ரூ.300 ஆக உயர்வு – அமைச்சரவையில் தீர்மானம்!
இது போன்ற தற்கொலை முடிவுகளில் இருந்து மாணவர்களை பாதுகாக்கும் பொருட்டு மத்திய அரசு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது தற்கொலைகளை தடுப்பதற்காக உம்மீட் என்னும் வழிகாட்டு வரைவை மத்திய பள்ளி துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி முதல்வரின் தலைமையில் நல குழு உருவாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.