தனியார்மயமாக்கப்பட உள்ள பொதுத்துறை நிறுவனத்தின் பட்டியல் – நிதி அயோக் சமர்ப்பிப்பு!!
2021- 2022ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கலில் அறிவிக்கப்பட்டுள்ள படி, இரண்டு பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஒரு பொது காப்பீட்டு நிறுவனம் தனியார் மயமாக்களுக்கு தேர்வு செய்யப்பட்டு அதன் பட்டியலை தயாரிக்கும் பணி நிதி அயோக்கிடம் ஒப்படைக்கப்பட்டது.
தனியார் மயமாக்கல்:
நாட்டின் வாரக்கடன் நிலுவைகளை ஈடு செய்வதற்காக பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்று 2021 -2022 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதற்கு நாட்டின் பல தரப்புகளில் இருந்தும் வங்கி பணியாளர்களிடம் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, தனியார்மயமாக்கப்படக்கூடிய வங்கிகளின் தொழிலாளர்களின் நலன்கள் அவர்களின் சம்பளம், ஓய்வூதியம் அனைத்தும் எப்போதும் போல் வழங்கப்படும் என்றும், அதில் மாற்றங்கள் செய்யப்படாது என்றும் விளக்கமளிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
தரம் உயர்த்தப்பட்ட வங்கிகள் நாட்டிற்கு தேவையான ஒன்றாகும். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) போலவே நாட்டின் வங்கிகளும் பெரிய நிலையை அடைவதற்காகவே இந்த தனியார் மயமாக்கல் செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார். இரண்டு பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஒரு பொது காப்பீட்டு நிறுவனத்தின் பெயர்களைத் தேர்ந்தெடுக்கும் பணி நிதி ஆயோக்கிடம் வழங்கப்பட்டது.
CBSE 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வெளியீடு – கல்வி வாரியம் விளக்கம்!
முதலீட்டு நிதியுதவியின் ஒரு பகுதியாக நடப்பு நிதியாண்டில் தனியார்மயமாக்கப்படவுள்ள பொதுத்துறை நிறுவனங்களின் இறுதிப் பெயர்களை முதலீட்டுக்கான கோர் குழு செயலாளர்களிடம் அரசு சிந்தனைக் குழு சமர்ப்பித்துள்ளது என்று அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அமைச்சரவை செயலாளர் தலைமையிலான கோர் குழு செயலாளர்களின் அனுமதியைத் தொடர்ந்து, இறுதி செய்யப்பட்ட பெயர்கள் ஒப்புதலுக்காக சென்று இறுதியில் பிரதமர் தலைமையிலான அமைச்சரவையில் இறுதி ஒப்புதலுக்கு செல்லும்.
இரவு 8 மணி வரை ஹோட்டல்கள் இயங்க அனுமதி – முழு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிப்பு!
நடப்பு நிதியாண்டில் 2 பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ஒரு காப்பீட்டு நிறுவனம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் பங்கு விற்பனையிலிருந்து ரூ .1.75 லட்சம் கோடி மத்திய அரசு பெற்றுள்ளது. கடந்த நிதியாண்டில் CPSE முதலீடுகளை விற்பனை செய்ததன் மூலம் ரூ .2.10 லட்சம் கோடி மத்திய அரசுக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.