இரவு 8 மணி வரை ஹோட்டல்கள் இயங்க அனுமதி – முழு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிப்பு!
அனைத்து மாநிலங்களிலும் தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வரும் நிலையில், மேற்கு வங்கத்தில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை உணவகங்கள் இயங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
ஊரடங்கு தளர்வுகள்:
இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில தினங்களாகவே கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை சற்று குறைவாக காணப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி பணிகளை துரிதப்படுத்தியதே. தற்போது கொரோனா பாதிப்பின் விகிதம் குறையத் தொடங்கியுள்ளதால் சில மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
தற்போது இது குறித்து மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் தன் மாநில ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்துள்ளார். அதன்படி தற்போது தொற்று நோயின் தாக்கம் குறைந்து வருவதால் வணிகத்தை அதிகரிக்கும் வகையில் மாநில செயலகம் தொழித்துறை அதிகாரிகளுடன் சிறப்பு ஆலோசனையை நடத்தியது. இந்த கூட்டத்தில் உணவகங்கள் திறப்பதற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் கண்காணிப்பு – ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!
அதன்படி மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை உணவகங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் உணவகங்களில் கொரோனா தடுப்பு பணிகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். மேலும் இந்த அறிவிப்பு வணிக வளர்ச்சிக்காக எடுத்த முடிவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.